தடையை மீறும் கனரக வாகனங்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் எச்சரிக்கை*

சிவாலய ஓட்ட பாதுகாப்பு பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் சாலையில் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 14,15 ஆகிய தேதிகளில் கனிம வள டாரஸ் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையினை மீறி மாவட்டத்திற்குள் நுழையும் கனிமவள கனரக வாகனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.






