• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

புத்தாண்டு அன்று திண்டுக்கல்லில் பிறந்த 20 குழந்தைகள்..,

ByS.Ariyanayagam

Jan 2, 2026

ஆங்கில புத்தாண்டையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்தன.

குழந்தை பிறப்பது மகிழ்ச்சியான செய்தி என்றால் விசேஷ நாட்களில் குழந்தை பிறப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப் படுகிறது .
அந்த வகையில். ஆங்கில புத்தாண்டான நேற்று (ஜனவரி-1) காலை முதல் மாலை 5:00 மணி வரை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 6 ஆண், 14 பெண் என 20 குழந்தைகள் பிறந்தன.

ஆங்கில புத்தாண்டையொட்டி குழந்தை பிறந்ததால் அந்தந்த குடும்பத்தினர் கூடுதல் அதிர்ஷ்டமாக கருதி மகிழ்ச்சி அடைந்தனர்.