• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மகாத்மா காந்தியின் பெயர் நீக்கியது கண்டித்து திமுக சார்பில் ஆர்பாட்டம்..,

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கியது கண்டித்து திமுக சார்பில் விருதுநகர் யூனியன் அலுவலகம் முன்பு MLA ARR சீனிவாசன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் சேர்மன்,மாதவன், நகர செயலாளர் SRS தனபாலன்,மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் KG ராஜகுரு,செயற்குழு உறுப்பினர் மதியழகன், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மற்றும் விசிக, கம்யூனிஸ்ட் CPM கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டசமுத்திரம் CPM பேசும் போது மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைந்ததே தீரும் என்று கூறினார்.

பின்னர் சுதாரித்து கொண்ட அவர் எடப்பாடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று கூறினார். இதை கேட்ட திமுகவின் தொண்டர்கள் மேடையிலேயே இப்படி உளறி கொட்டுகிறாரே என்று கூறினார்கள்.