• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

குழந்தைகள் தின விழா..,

ByKalamegam Viswanathan

Nov 14, 2025

மதுரை மாநகர் காவல் துறையின் சார்பாக.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பணியாற்றிய பெருமை மிக்க சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பின் மாணவ பிரதிநிதிகளை அழைத்து குழந்தைகள் தின வாழ்த்துக்கள் தெரிவித்து அவர்களுக்கு இனிப்புகள், எழுதுகோல், திருக்குறள் புத்தகம் வழங்கியதோடு அவர்களிடம் விழிப்புணர்வுடன் தன்னம்பிக்கை வார்த்தைகளை எடுத்துக்கூறி இந்த நாளில் ஒழுக்க நெறிகளையும் சாலை விதிகளை கடை பிடித்தும்.. கல்வியில் மேம்பட்டு திகழ்ந்து பெற்றோருக்கும் பள்ளிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவ செல்வங்களின் செயல்பாடுகள் மேம்பட்ட வகையில் இருந்திட வேண்டி உறுதி மொழி மேற்கொண்டர்.

உடன் பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன்,, போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் லிங்ஸ்டன், பாண்டியராஜன்.. காவலர்கள்,, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்..