• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேங்கி துர்நாற்றம் காரணமாக சுகாதார கேடு..,

ByK Kaliraj

Nov 14, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கொத்தளத்த சாமிகோவில் தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெருவில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் முழுமையாக வெளியேற முடியாமல் கால்வாயிலேயே பல நாட்களாக தேங்கி துர்நாற்றம் காரணமாக சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது.

இதனால் இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டு மக்கள் அவதிப்படும் நிலை இருந்து வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியேறாமல் நிற்கும் கழிவு நீரை முழுமையாக அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.