• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்..,

ByK Kaliraj

Oct 30, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாராணாபுரம் மெயின் ரோட்டில் ட்ரான்ஸ்ஃபார்மர் உள்ளது.

இந்த டிரான்ஸ்பார்மர்வில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததில் மளமளவென எரிய தொடங்கியது.

இதனால் பெரும் சேதாரத்தை தவிர்ப்பதற்காக அக்கம் பக்கத்தினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் உடனடியாக வந்து தீயணைப்பு வீரர்கள் தீயினை முற்றிலும் அணைத்தனர்.

உடனடியாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. செயல்பட்ட தீயணைப்புத் துறையினரை மக்கள் பாராட்டினார்கள்.