கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையேயான 87 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. 2026 ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணிகளுக்காக மத்திய ரயில்வே துறை கடந்த 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளில் ரூ.940 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
சமீபத்தில் கூடுதல் ரூ.575 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று துறைசார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.