• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஓட்டுநர்கள் காவலர்கள் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு..,

ByS. SRIDHAR

Sep 23, 2025

புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி சாலையில் இன்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவலர்களும் ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒலிபெருக்கியின் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பயன்படுத்த வேண்டும் மற்றும் வாகனங்களில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும். போக்குவரத்து விதிமிரல்கள் செய்யக்கூடாது சாலைகளில் வலையும் பொழுது இண்டிகேட்டர் சிக்னல் பயன்படுத்த வேண்டும். போன்ற விழிப்புணர்வு அறிவுரைகளை மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்கள். இதனை போக்குவரத்து காவலர் கருப்பையா மற்றும் இணை அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்படுகிறது.