செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணி மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று விழா முன்னேற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பார்வையிட்டார். மேலும் கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான வரைபடத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளரிடம் அமைச்சர் கே என் நேரு பேட்டியளித்தார்.

கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவை மாநாடு போல் நடத்துவதற்கு செந்தில் பாலாஜி முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். சாதாரண கூட்டத்தையே மாநாடு போல் நடத்தும் செந்தில் பாலாஜி இந்த முப்பெரும் விழாவினை மிகப்பெரிய அளவில் 3 லட்சம் பேர் பங்குபெறும் வகையில் சிறப்பானதாக செய்து வருகிறார். கரூர் மட்டுமல்ல நாமக்கல் திண்டுக்கல் மற்றும் எங்கள் மாவட்டமான திருச்சியில் இருந்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிக அளவில் பங்கேற்க உள்ளோம்.
செந்தில் பாலாஜி எதையும் சிறப்பாக செய்து காட்டுபவர் அதனால்தான் இந்த முப்பெரும் விழாவினை தலைவர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். இந்த முப்பெரும் விழா வரும் 2026 தேர்தலில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும். தேர்தலில் வெற்றிக்கான முதல் அஸ்திவாரத்தை செந்தில் பாலாஜி இந்த முப்பெரும் விழா மூலம் அமைத்துள்ளார் என தெரிவித்தார். உடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.