சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள், மருத்துவர் நலன், ஆவணங்களை முறையாக பராமரித்தல் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்கான அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.