• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி திருவிழா..,

ByK Kaliraj

Jul 20, 2025

மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி திருவிழா நடைபெற்றது.

மேலும் விழாவில் 500க்கும் பெண்கள் பழைய விருதுநகர் சாலையிலுள்ள காமராஜர் வாசக சாலையிலிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பின்னர் காமராஜர் சிலைக்கு பாலபிஷேகம் செய்தனர்.

ஊர்வலத்தின் போது கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மட்டுமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்களில் சலங்கை கட்டி பாரம்பரியமிக்க பெருஞ்சலங்கை நடனமாடியது காண்போரின் கவனத்தை ஈர்த்தது. விழாவில் கலந்து கொண்ட அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கே.டி.ராஜேந்திர பாலாஜி காமராஜர் சிலைக்கு கிரேன் இயந்திரம் மூலம் பிரம்மாண்டமான மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுடன், சமுதாயப் பெரியோர்களும், தொழிலதிபர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரும் கலந்து கொள்ள இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.