காஷ்மீரில் சுற்றுலாவிற்காக வந்த பொதுமக்களை திடீரென தீவிரவாதிகள் சுட்டதில் 28 நபர்கள் உயிரிழந்தனர் .மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட 28 பொதுமக்களுக்கு கரூர் இந்து முன்னணி சார்பில் கரூர் காமராஜர் சிலை அருகே மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மற்றும் சிவசேன அமைப்பினர் பங்கேற்றனர்.




