• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவு !!!

BySeenu

Mar 27, 2025

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பதவி வகிக்கும் முனைவர் கீதாலட்சுமியின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, அப்பல்கலைக் கழகத்தின் பதிவாளர் துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் கிரிலோஷ் குமார், பல்கலைக் கழக துணைவேந்தருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகச் சட்டம் 1971 பிரிவு 11 (4) இன் படி, பதிவாளர் துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனத் தெரிவித்து உள்ளார்.

மேலும், இது தொடர்பான தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.
இந்த தகவல், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், வேளாண்மை – உழவர் நலத் துறை, தலைமைச் செயலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.