கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
ஊழல் புகார் தொடர்பாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர்.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை சம்பவத்தின் போது, மருத்துவமனை முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ்.
சந்தீப் கோஷ் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சந்தீப் கோஷ் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.





