• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் அக்கணம் பாளையம் சமுதாயக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டினார்…..

பல்லடம் மற்றும் பொங்கலூர் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற செய்தி துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் அக்கணம் பாளையம் என்ற பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் தார் சாலை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்தார். பொதுமக்கள் தாங்கள் பகுதியில் குடிநீர் மட்டும் பட்டா வழங்க வேண்டும், வீடு கட்டி தர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமுதாய நலக்கூட கட்டிடத்தை இப்பகுதியினர் முற்றுகையிட்டு அமைச்சர் அவர்களிடம் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாகவும், இதனால் பல்வேறு திட்டங்களில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் என அவர் தெரிவித்தார்.