• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

61_நாட்களுக்கு பின் இன்று மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள்.

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில்300_க்கும் அதிகமாக கட்டில் இருந்த படகுகள் 61_நாட்களுக்கு பின் இன்று மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள்.

கிழக்கு கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகள் மீன்பிடி தடைகாலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை முதல் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இந்த விசைப்படகுகள் அனைத்தும் ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு இன்று இரவு 9 மணி முதல் கரைக்கு திரும்ப வேண்டும் என துறைமுக நிர்வாகம் கண்டிப்பு.