வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (19-ந் தேதி) தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது” என்றார்.