திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பல்லடத்தின் முக்கிய சாலைகளின் வழியே அணிவகுப்பு நடத்தினர். பல்லடம் துணை காவல் கண்காணிப்பளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் 97 துப்பாக்கி ஏந்திய போலீசார் அணி வகுப்பு நடத்தினர். இப்பேரணி பல்லடம் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து அண்ணாநகரில் முடிவடைந்தது.