சிந்தனை துளிகள்
நம் ஒவ்வொருவருடைய மனதிருப்தி தான் நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக இருக்கிறது.
அளவுக்கு அதிகமான அன்பும் எல்லையின்றி கொண்டாடப்படும் நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஒருநாள் கண்ணீருக்கும் ஏமாற்றத்திற்கும் இடம் உண்டு.. அது நட்பாக இருந்தாலும் சரி.. காதலாக இருந்தாலும் சரி.
வாழ்க்கை என்பது கனவு அதை கலைத்து விடாமல் கலை நயத்துடன் பார்த்து பழகு.. வாழ்க்கை இன்னும் அழகாக தெரியும்.!
வாழ்க்கையின் அழகு என்பது.. நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதில் இல்லை.. உன்னால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது.
அனுபவம் என்ற பாடத்தை வாழ்க்கை கற்றுத் தருகிறது.. வாழ்க்கை என்ற பாடத்தை அனுபவம் கற்றுத் தருகிறது.