• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மாநிலங்களுக்கு ரூ.44 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்தது…

Byமதி

Oct 29, 2021

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. அமலில் உள்ளது. இந்த வரி விதிப்பு முறையை அமல்படுத்தப்பட்டதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கவேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டது என மத்திய அரசு கூறிவருகிறது.

எனவே இந்த நிலுவைத்தொகையை மத்திய அரசே கடன் வாங்கி மாநிலங்களுக்கு அளிப்பது என்று முடிவு செய்தது. அதன்படி கடந்த நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியது.

இதன் தொடர்ச்சியாக இந்த நிதியாண்டிலும் மாநிலங்களுக்கான இழப்பீடு நிதியில் பற்றாக்குறை நிலவுவதால், மத்திய அரசே ரூ.1.59 லட்சம் கோடி கடன் வாங்கி வழங்குவது என கடந்த மே மாதம் நடந்த 43-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் மேற்படி நிதியை கடன் வாங்கி மத்திய அரசு அளித்து வருகிறது. இந்த தொகையில் முதல் தவணையாக ரூ.75 ஆயிரம் கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த ஜூலை 15-ந் தேதி விடுவித்தது. பின்னர் 2-வது தவணையாக கடந்த 7-ந்தேதி ரூ.40 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மீதமுள்ள ரூ.44 ஆயிரம் கோடியை 3-வது தவணையாக நேற்று விடுவித்து உள்ளது. Pஇதில் தமிழக அரசுக்கு ரூ.2,240.22 கோடி கிடைக்கும்.