• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மதுரையில் கனவு ஆசிரியர் விருது பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டு..,

ByKalamegam Viswanathan

Dec 22, 2023
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கனவு ஆசிரியர் விருது பெற்ற மாநகராட்சி ஆசிரியர்களுக்கு,  மேயர் இந்திராணி பொன்வசந்த்,   பாராட்டு தெரிவித்தார். 
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2023-24 ஆண்டிற்கான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தலைமையில் 19.12.2023 (செவ்வாய்கிழமை) அன்று நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாடு அளவில் 379 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில், மட்டும் 17 ஆசிரியர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.அதில் மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசீலி, பட்டதாரி ஆசிரியை ரிஸ்வானா மற்றும் செல்லூர் கட்டபொம்மன் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி சுகன்யாதேவி , கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் நேரில் சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றனர்.
இந்நிகழ்வில், கல்வி அலுவலர் மாரிமுத்து, பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.