• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

இலக்கா மாற்றத்தை ஆளுநர் ரவி ஏற்க மறுப்பு..,

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்திருக்கும் இந்த வேளையில் அவர் வகித்த பதவியை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமிக்கு கூடுதலாக பதவியை ஒதுக்கி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இதற்கான கடிதம் அரசு தரப்பு மூலம் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது. இதைக்கண்ட ஆளுநர் ரவி இந்தக் கடிதத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கடிதத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது மட்டும் குறிப்பிட்டு இருக்கிறது. செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை மூலம் குற்றவாளி என கைது செய்யப்பட்டு இருப்பதை கடிதம் மூலம் தமிழக அரசு தெரியப்படுத்தவில்லை. அதனால் இலக்கா மாற்றத்தை நான் பரிந்துரைக்க முடியாது என ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.