• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு குமரி எம்.பி.விஜய் வசந்த் தேர்தல் பிரச்சாரம்

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்தை.அகில இந்திய காங்கிரஸ் யின் கர்நாடக தேர்தல் குழுவினரால்.
கர்நாடகாவில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான. கடூர்,சிரவணபெலகொலா, அரசிகெரே, பேலூர், ஹாசன்,ஹொளேநரசிபூர், அரக்கலகூடு,சக்லேஸ்பூர், ஆகிய 8_சட்டமன்றங்களின் தேர்தல் பார்வையாளராக நியமித்துள்ளது.
கர்நாடகா மாநிலதலைவர் மற்றும் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்களை அணுகி விஜய் வசந்த் முதலில் ஆலேசனை மேற்க்கொண்டதுடன். தொகுதிகளில் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் விஜய் வசந்துடன் தமிழ் மற்றும் கன்னட மொழி பேசும் 10_பேர் அடங்கிய குழுவினர் உடன் கடந்த 7_நாட்களாக இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளில் பொது மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் சின்னமான “கை”சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.. படித்த வேலை இல்லாது இருக்கும் இளைஞர்களை ஒரே இடத்தில் ஒன்று பட செய்து.கர்நாடக மாநிலத்தின் ஆட்சி மாற்றத்தின் அவசியம். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தும்.மாநிலத்தின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய ஒரு ஆலோசனை குழு அமைத்து வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டம் வகுக்கப்படும்.இளம் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு முக்கியமான உறுதி மொழியான.

வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிறை வேற்றும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் வேலை இல்லாத இளைஞர்கள் முயற்சியில்.முதலில் ஒவ்வொரு இளைஞனும் அவர்கள் வீட்டில் உள்ள அனைத்து ஓட்டையும் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் வாக்களிக்க செய்வதுடன்.ஒவ்வொரு இளைஞனும் தனிப்பட்ட முறையில் ஆளுக்கு 10_வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை கூறி உள்ளதுடன். தேர்தல் வாக்கு பதிவின் ஒரு நாளுக்கு முன் வரை இளைஞர்களுடன் இணைந்து வாக்கு சேகரிக்க உடன் வருவதாக மேற் கொண்டுள்ள முயற்சி. இளஞ்சர்களின் குடும்பத்தார் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டார்.மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.
விஜய் வசந்திக்கு ஒதுக்கப்பட்ட எட்டு தொகுதிகளில். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் வெளிப்படுத்தும் உற்சாகம் அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களையும் தானகவே ஈர்த்த நிலையில் அவர்களும் ஆற்றும் களப்பணியால் காங்ரஸ்யின் வெற்றியை நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உறுதி செய்வதை மக்கள் தனக்கு தரும் உற்சாகமான வரவேற்பின் மூலம் காண முடிவதாக விஜய் வசந்த் எம்.பி.அவரது முக நூல் மூலம் குமரி பத்திரிகையாளர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.