மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ராஜா முத்தையா ஹால் அருகே வார்டு 31 பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருந்தது இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று மாநகராட்சி உதவி பொறியாளர் பொன்மனி அவர்கள் அந்த பகுதியில் இருந்த கடைகளை அகற்றினர் மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….