• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

2 கோடி மதிப்பிலான துணிகள் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் துணிக்கடை ஒன்றில் 2 கோடி மதிப்பிலான துணிகள் திருடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் துணிக்கடையில் 2 கோடி மதிப்பிலான துணிகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் ஜோதி கணேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் ஆடைகள் கொடுத்த உரிமையாளர்கள் கொடுக்க வேண்டிய பணத்திற்கு பொள்ளாச்சியை சேர்ந்த நபர் பரமகுரு ஆடைகளை எடுத்து சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.