தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகில் கழக கொடியேற்றி பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்…
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் உதகை சிவா தலைமையில் கொடியேற்றினர்.இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடினர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.