• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

7-ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்..

ByKalamegam Viswanathan

Mar 9, 2025

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நாகலிங்க கோவில் தெருவை சேர்ந்த 13 வயது சிறுமி நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே நிகழ்வு நேரத்தில் வீட்டின் குளியலறைக்குள் சென்ற பள்ளி மாணவி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. வீட்டிலிருந்தவர்கள் குளியலரை கதவை உடைத்து பார்த்த போது துப்பட்டாவில் தூக்கிலிட்டு கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.