மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சங்கர் நகர் 8வது தெரு பகுதியில் பாபு- சுதா தம்பதியரின் பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 28 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பாபு – சுதா தம்பதியர் அருகாமையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு இரவு நேரங்களில் சென்று தங்குவதை அறிந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளனர் .

இதனை தொடர்ந்து, அருகாமையில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்க மூன்று தொப்பி அணிந்த திருடர்கள் நோட்டமிடும் காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.








