• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப்பகுதியில் 3 யானைகள் உலா – மக்கள் அச்சம்

Byதரணி

Sep 23, 2024

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பரப்பலாறு அணைப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி வந்த மூன்று காட்டு யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன. இதனால் அணையின் அருகில் உள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

யானைகளை யாரும் அச்சுறுத்தவோ விரட்டவோ கூடாது, இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.