• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிசாமி சேலத்தில் 3 நாட்கள் முகாம்

ByA.Tamilselvan

Sep 10, 2022

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து 3நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இன்று மாலை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் வழியாக சேலம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து 3 நாட்கள் சேலத்தில் தங்கும் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடையே நாளை மறுநாள் முதல் 2 நாட்கள் வி.கே.சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதே நேரத்தில் சேலத்தில் 3 நாட்கள் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.