தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், மதுரை,…
மழை எதிரொலியாக சதுரகிரி செல்ல 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்…
ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில்…
திருச்செந்தூர் கடலில் புனித நீராட தடை
தமிழகத்தில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதாலும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் கடலில் புனித நீராடுவது வழக்கம். கோடை விடுமுறை…
நாளை வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பு
மதுரை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுவதாகவும், வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில்…
2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது
முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று அடுத்த கட்ட வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது. பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில்…
அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடைசி நாள்.
சில வாரங்களுக்கு முன் பிளஸ் 2 பொது தேர்வின் முடிவுகள் வெளியாகியது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி சென்ற ஹெலிகாப்டர் விபத்து
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி மற்றும் அவருடன் பயணித்த அனைவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு.
ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஜூன் 24 காலை 10 மணி முதல்…
பெற்றோரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் பிள்ளைகளே!
ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளும் தனது தாய் தகப்பன் இவ்வளவு கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் அதை உணர்ந்து பிள்ளைகள் தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் சிறந்த குறும்படம் இவை.












