• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே கார் விபத்தில் பத்து மாத குழந்தையின் தாய் உள்ளிட்ட 2 பேர் பலி

ByKalamegam Viswanathan

Apr 30, 2023

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏற்பட்ட விபத்தில் பத்து மாத குழந்தையின் தாய் உள்ளிட்ட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் முனிக்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் வேலை கடந்த, இரண்டு ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது இதில் போதிய பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் எதுவும் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இன்று சென்னையிலிருந்து ராஜபாளையத்தில் தனது நண்பரின் இல்ல விழாவிற்கு ஹானஸ்ட்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்ற பொழுது கார் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஹானஸ்ட்ரஜின் மனைவி, பவானி மற்றும் கார் ஓட்டுநர் பாலாஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . மேலும் இதில் பயணம் செய்த பவானியின் 10 மாத குழந்தை ரையன்மகில் மற்றும் ஹானஸ்ட் ராஜ் அவரின் அம்மா உள்ளிட்ட மூன்று பேரும் காயங்களுடன் உயிர்த்தபினர். இவர்கள் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். பாலம் வேலை நடைபெறுகிறது என்ற எச்சரிக்கை பதாகைகள் இல்லாததும் இந்த விபத்திற்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது, இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.