விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,10,110 பணம் பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக்கபட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இன்றி ரூ 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுவது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பறக்கும் படை அதிகாரி திருக்கண்ண முனியாண்டி தலைமையில் காரியாபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கலைச்செல்வன் காவலர்கள் அருள்சேவியர்ராஜ் மற்றும் பாண்டீஸ்வரி ஆகியோர் கொண்ட பறக்கும்படை அதிகாரிகள் வாகனங்களில் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா ஏதேனும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதித்ததில் அதில் முறையான ஆவணங்கள் இன்றி ரூ 2,10,110 பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் காரியாபட்டியை சேர்ந்த தனியார் நிறுவண ஊழியர்கள் விஜயகுமார்(37) , ஓட்டுநர் ராஜாராம்(22) ஆகியோர் திருச்சுழியில் நிறுவணத்தின் பணத்தை வசூல் செய்துவிட்டு அருப்புக்கோட்டை வழியாக மீண்டும் காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. எனினும் கொண்டு செல்லப்பட்ட பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ 2,10,110 பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]
- கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனைகோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.உலக பாரம்பரிய சோடோ […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது ‘திருமண […]