ஒமிக்ரான் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சென்னையில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 194 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 294 ஆக அதிகரித்தது.
ஒரே நாளில் 50 சதவீதம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதே போல், 10 நாள்களுக்கு முன்பு பதிவான பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இது இரண்டு மடங்கு எண்ணிக்கை ஆகும். திடீர் தினசரி பாதிப்பு உயர்வு, சென்னையில் மூன்றாம் அலை ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், புதிய மாறுபாடு ஸ்லீப்பர் செல் போல் ஆங்காங்கே இயங்கிவருகிறது. பலரும் லேசானது அல்லது அறிகுறியற்ற நிலையில் இருந்தால், மருத்துவரை பார்ப்பது கிடையாது. பரிசோதனை மட்டும் செய்வார்கள் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார்கள். இது பரவலை அதிகரிக்கிறது.டெல்லி, மும்மையில் ஏற்கனவே தினசரி எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. தற்போது, சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது’ என்றார்.
புள்ளிவிவரங்கள் படி, டிசம்பர் 15 ஆம் தேதி 126 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. பின்னர் படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் 29இல் 294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று, ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அந்த தெருவை கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில்,’ சென்னையில் 200க்கும் மேல் கொரோனா பாதிப்பு உறுதியானது மூன்று மாதங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி தான். அப்போது, 205 பேர் பாதிக்கப்பட்டனர். ஜூன் மாதத்தில் தான் 290ஆக கொரோனா பாதிப்பு இருந்தது.
தற்போது, ஒரேடியாக மிகப்பெரிய அளவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டிசம்பர் 19இல், சென்னையில் கொரோனா பாதிப்பு 0.06 சதவீதமாக தான் இருந்தது. ஆனால், தற்போது 1.7 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது என்றார்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜியின் தொற்றுநோயியல் நிபுணர்கள் கூற்றுப்படி, சென்னையில் R மதிப்பு நவம்பர் மூன்றாவது வாரத்தில் 0. 93 ஆக இருந்த நிலையில், தற்போது 1. 2 ஆக அதிகரித்துள்ளது. ஆர் என்பது வளர்ச்சி விகிதம் அல்லது செயலில் உள்ள பாதிப்புகளின் வீழ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.
R மதிப்பு 1 ஐ விட அதிகமாக இருந்தால், தொற்று அதிகரித்து வருவதை இது காட்டுகிறது என தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் துணை இயக்குனர் டாக்டர் பிரப்தீப் கவுர் கூறுகிறார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், ‘தினசரி மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்டி – பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதால், சுமார் 27 பயணிகளுடன் தொடர்பிலிருந்த 999 பேரை சுகாதார துறையினர் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர் ‘ என்றார்.
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]