அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.37 கோடி மோசடி செய்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் மணி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 மாதங்களாக தலைமறைவாக இருந்த செல்வகுமாரை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தது.
எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த போது அவரது தனி உதவியாளராக இருந்தவர் மணி. இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர். மணி எடப்பாடி பழனிசாமியிடம் தனி உதவியாளராக இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தரவில்லை.
இதில் மணி என்பவர் சேலம் அருகே ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் எடப்பாடியார் பேரவை என்ற அமைப்பை துவங்கி வைத்துக்கொண்டு எட்டப்படியுடன் ஒரு நெருங்கிய நட்புள்ளவராக செல்வகுமார் காட்டிக்கொண்டார். செல்வகுமாரும் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இந்த செல்வகுமாரின் மூலமாக தான் பல பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மணி மோசடி செய்துள்ளார்.
இதுதொடர்பாக செல்வகுமார் ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ஒரு புகார் கொடுத்திருந்தார். அதாவது ரூ.1.37 கோடியை, தான் அரசு வேலை வாங்கி தருவதாக 17 நபர்களிடம் இருந்து பெற்று கொடுத்திருந்தேன். அந்த ரூ.1.37 கோடியை மணி ஏமாற்றிவிட்டார். எனவே அவரை கைது செய்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று செல்வகுமார், மணி மீது புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் மீது விசாரணை நடத்திய நிலையில் நெய்வேலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளம் பொறியாளர் மின்சார துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.அந்த 17 ரூபாயை பெற்றுக்கொண்ட மணி மற்றும் செல்வகுமார் அரசு வேலை வாங்கி தராமல் அவரை ஏமாற்றியுள்ளனர். இந்த நிலையில் தான் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புகார் கொடுத்ததின் அடிப்படையில் தற்போது மணி மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர் செல்வகுமார் ஆகிய இருவர் மீதும் சேலம் மாவட்ட குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அவர்களை கைது செய்ய முனையும் போது இருவரும் தலைமறைவானார்கள்.
இந்த நிலையில் கடந்த சில திங்களுக்கு முன்பு மணி கைது செய்யப்பட்டார். செல்வகுமாரை தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கொண்டலாம்பட்டி பகுதியில் செல்வகுமார் பதுங்கி இருந்த போது அவரை கைது செய்துள்ளனர்.
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]
- சோழவந்தான் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் […]
- ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்புஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் […]
- உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை.., விபத்து ஏற்படும் அபாயம்..!காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி […]
- தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியதுகுரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் […]
- நாகர்கோவிலில் மாணிக்கக் கற்கள் எனக் கூறி.., பெண்களை ஏமாற்றிய பூசாரிகள் மீது வழக்கு..!நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் […]
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை […]
- பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து தங்க நகைகள் வாங்கிய திருடன்மதுரை வாடிப்பட்டியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம டூப்ளிகேட் ஏடிஎம் கார்டை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் மனநிறைவு… மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் […]
- அதானி விவகாரம்- 12வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது […]
- பொது அறிவு வினா விடைகள்
- கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக […]