• Fri. Mar 29th, 2024

எதிர்கட்சிகளை வேவு பார்ப்பது தேசத்திற்கு அவமானம் ராகுல் காந்தி சாடல்!…

Byadmin

Aug 6, 2021

டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இளைஞர் காங்கிரசார் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. முன்னதாக இளைஞர் காங்கிரசாரிடையே ராகுல்காந்தி பேசியதாவது.

நாட்டின் பிரதமர் மோடி வேலையின்மையைப் பற்றி வாய் திறப்பதில்லை. கடந்த 7 ஆண்டுகளில் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எதிர்கட்சியினரை வேவு பார்க்கும் பெகாசஸ் விவகாரம் இந்த நாட்டுக்கு ஒரு அவமானம். நீங்கள் உண்மையை பேசினால் உங்கள் செல்போனுக்குள் பெகாசஸ் வந்துவிடும் என்று ராகுல் காந்தி எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *