அப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 320 மாணவ மாணவிகள் தங்களின் படைப்புகளை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி இருந்தனர். அவர்களின் படைப்புகள் இன்று முதல் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை காண வரும் பொதுமக்கள் அதில் உள்ள சிறந்த மூன்று படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள். வரும் வியாழக்கிழமை மாலை 5 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும். அனைவரும் வந்து இக் கண்காட்சியை பார்வையிட்டு இளம் ஓவியர்களை தேர்ந்தெடுக்கலாம் என நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.