அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மதுசூதனன் கடந்த சில வாரங்களுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்யத நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக 2 துண்டுகளாக பிரிந்த சமயத்தில் மதுசூதனன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல் ஆதரவை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதிமுகவே எங்களுது தான் என்று பகிரங்கமாக தெரிவித்தவர்.