தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் தினந்தோறும் 3 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலை காணப்படுகிறது.
கரோனா 3வது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், ஆக்சிஜனை சேமிப்பது மிக அவசியம். இந்த சூழலில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முட வேண்டிய அவசியம் இல்லை. தொற்றின் எண்ணிக்கை பூஜ்ஜியத்துக்கு வந்தபிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து யோசிக்கலாம் என்று அமைச்சர் கூறினார்.