ராஷ்டிரியம் சுயம் சேவக்( ஆர் எஸ் எஸ்)யின் தலைவர் மோகன் பகவத் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று இரவு(26.07.21)கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வந்தார். Z பிரிவு பாது காப்பில் உள்ளவர் என்பதால் கடுமையான காவச பாதுகாப்புடன் குமரி வந்து சேர்ந்தார்
குமரி விவேகானந்தர் கேந்திரம் தங்கும் விடுதியில் 27,28 தேதிகள் இவர் தங்கவுள்ளார்.இரண்டு தினங்கள் நடக்கும் கலந்துறையாடலில்.ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சேர்ந்த பொருப்பாளர்களுடன் ஆலோசனை மேற் கொள்ளும் நிகழ்ச்சி குறித்து செய்தி எடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. விவேகானந்தர் கேந்திரம் காவல்துளையின் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.