சிவகங்கை நகர் அலுவலகம் முன்பு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் MLA தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், 50க்கும் மேற்பட்டோர் முக கவசம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளான பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாகவும், விலைவாசி உயர்வு, 100 நாட்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை, பெண்களுக்கு மாதம்தோறும் ரூ 1000 நிதி தருவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார், இதுவரை அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.