தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பதற்கு மட்டுமே பைனான்சியர்கள் கடன் தருகின்றனர் புதுமுகங்கள், வியாபார முக்கியத்துவம் இல்லாத நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு கடன் வாங்க முடிவதில்லை அதனால் யுடியூப், சமூகவலைதளங்களில் அறிமுகமானவர்கள் தாங்கள் உண்மை கதையை படமாக தயாரிக்க போவதாகவும், அதில் நடிக்க நடிகர் நடிகைகள் தேவை என சமூக வலைதளங்களில் விளம்பரங்களை வெளியிடுவார்கள் ஆர்வக்கோளாறில் வருகின்றவர்களை வானளாவ புகழ்ந்து நடிகராக ஒப்பந்தம் செய்து விட்டு சில நாள் கழித்து தங்கள் குறுக்கு வழியை பயன்படுத்துவார்கள் – பைனான்ஸ் கிடைப்பதற்கு தாமதமாகும் போல் தெரிகிறது அதனால் சுயாதீன நிதி ஏற்பாட்டில் படம் தயாரிக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம் என கூறி நடிக்க வந்தவர்களிடம் வசூல் வேட்டையை தொடங்குவார்கள் ஏற்கனவே வலைத்தளம் மூலம் சுமார் 6.5 கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து பெற்ற பரிதாபங்கள் கோபி – சுதாகர் படத்தை தொடங்கினோம் கொரோனா குறுக்கிட்டது அதனால் அந்தப் படத்தை தொடர முடியவில்லை அதற்கு மாற்றாக எங்கள் உழைப்பில் இருந்து படத்தை தயாரிக்கிறோம் என புதுசாக ஒரு கதையை கூறி
பரிதாபங்கள் புரொடக்சன்ஸ்’ வழங்கும், விக்னேஷ் S.C.போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயனின் இயக்கத்தில், உருவாகும் புதிய படத்திற்கு நேற்று தொடக்கவிழாவை சென்னையில் உள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடத்தியுள்ளனர்இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், ‘பரிதாபங்கள்’ புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் V.T.V.கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், வின்சு ரேச்சல் சாம், ரமேஷ் கண்ணா, Mu.ராமசாமி, முருகானந்தம், பிரசன்னா, கௌதம், ஹரிதா, யுவராஜ் கணேசன், டிராவிட், பிரகாஷ், ஜீவா சுப்பிரமணியம், கோதண்டம், வெங்கல் ராவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தப் படம் குறித்து கோபி – சுதாகர் பேசும்போது, “இந்தக் கதையை கேட்டவுடனே இது வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இருக்காது எனப் புரிந்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள்தான் படத்திலும் இருக்கும் ஆனால் அதோடு ஃபேண்டஸி கலந்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் இப்படம் இருக்கும்.
யு டூயூப் வீடியோக்களில் சிரிக்க வைப்பது வேறு. ஆனால் சினிமா எனும்போது ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். பரிதாபங்களில் இருக்கும் கோபி, சுதாகர் இதில் இருக்க மாட்டார்கள். ஆனால் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நீங்களும் சில நாட்கள் இணைந்து பயணிப்பது போல் இருக்கும். ஒரு புது மாதிரியான நல்ல பொழுதுபோக்கு அனுபவமாக இப்படம் இருக்கும்” என்றனர். ஏற்கனவே பெற்ற 6.5 கோடிக்கு என்ன கணக்கு என்பதை பகிரங்கமாக அறிவிக்காமல் அடுத்த படத்திற்கான வசூல் வேட்டையை யுடியூப் பிரபலத்தை வைத்து கோபி – சுதாகர் குருப் இறங்கியுள்ளது என்கிறது வலைத்தள மற்றும் கோடம்பாக்க சினிமா வட்டாரம்
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]
- சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பதட்டம்சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் […]
- மோடி அரசுக்கு எதிராக புதிய பிரச்சாரத்தை தொடங்கி காங்கிரஸ்மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி, வீடு வீடாகச் சென்று கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை […]
- ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!மறைந்த திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி […]
- கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்முகவூர் செட்டியார்பட்டி தளவாய்புரம் போன்ற பகுதிகளை சாரந்த 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிவகாசி […]
- கன்னியாகுமரியில் பரபரப்பு…. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்கன்னியாகுமரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்குவாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொட்டாரம் அரசு […]
- லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்நாகர்கோயிலில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. […]
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற க ழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
- கருணை கொலை பற்றி பேசும் தலைக்கூத்தல்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் உருவாக்கத்தில் கடந்த 14 வருடங்களாக படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து […]
- இரட்டை இலை சின்னம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் முடிவுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்இரட்டை இலை சின்னத்தை பெற உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காகஉழைக்கும் போது மனிதனாகிறான்ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போதுஅவன் உண்மையான மனிதனாகிறான். […]