புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின்வலியைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர்.
2000 ஆண்டுகளுக்குப் பின் நம் இனம் இப்படி ஒரு வலியைச் சந்திக்கும் என்று கணித்தாரோ கணியன்பூங்குன்றன்? அவர் அன்றைக்குச் சொன்ன சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது இந்தப்படம் பார்க்கும்போது புரியும்.
ஈழத்திலிருந்து தப்பி கேரளாவுக்கு வரும் விஜய்சேதுபதி, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய சூழலில், அவருக்கு ஒரு போலியான அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.
அதனால் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதுதான் படம்.
ஈழத்தமிழ் அகதியாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அகதிஎன்ற சொல்லின் துயர்மிகு பொருளை தன் நடிப்பின் மூலம் எல்லோரையும் உணர வைத்திருக்கிறார். இசைத்துறையில் திறனிருந்தும் குடியுரிமை இல்லாததால் நிராகரிக்கப்படும் காட்சிகள்,ஈழத்தமிழர் வாழ்க்கை குறித்து உலகின் மனசாட்சியைத் தட்டுகின்றன.விஜயசேதுபதியைக் காதலிக்கும் மேகாஆகாஷ், காதலில் கசிந்துருகுவதும் புனிதன், கிருபாநிதி என்கிற இரண்டு பெயர்ச்சிக்கலால் தவிப்பதும் மூலக்கதைக்குப் பலம் சேர்க்கின்றன.
ஈழத்ததமிழர்களை தாய்த்தமிழகத்திலுள்ள பிறமொழி அதிகாரிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை மகிழ்திருமேனியின் வேடத்தை வைத்து வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். மகிழ்திருமேனியின் குரல் அதற்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.மறைந்த நடிகர் விவேக் வரும் காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்க்கும் மகிழ்வும் அவர் இல்லையே என்கிற வருத்தமும் ஒருசேர வருகின்றன.
தபியா, கனிகா, கரு.பழனியப்பன், மோகன்ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் முக்கியமான வேடங்கள் அமைந்திருக்கின்றன.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். கதாநாயகன் இசைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால் பின்னணிஇசையில் கூடுதல் கவனம் எடுத்திருக்கிறார்.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில் ஈழத்துக்கொடுமைகள் கண்களில் உறைகின்றன.கலை இயக்குநர் வீரசமரின் உழைப்பு படத்துக்குப் பலம்.ஜான் ஆபிரகாமின் படத்தொகுப்பு இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்.சில பல குறைகள் இருப்பினும் ஈழத்தமிழ் அகதியை கதைநாயகனாக்கி, பேசாப்பொருளைப் பேசத் துணிந்தமைக்காக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்தைப் பாராட்டலாம்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]