• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் பெண்கள் மாநாடு 2024

BySeenu

Mar 7, 2024

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு – கோயம்புத்தூர் மற்றும் யங் இந்தியன்ஸ் YI – கோயம்புத்தூர் அத்தியாயம் ஆகியவை இணைந்து ‘தி வுமன் கான்க்ளேவ்’ (பெண்கள் மாநாடு ) முதல் பதிப்பு நடைபெற்றது.

மாநாட்டின் கருப்பொருள் ‘நாரி கதை’ கருப்பொருளாக கொண்டு இருந்தது.

பெண்கள் புதிய இந்தியாவுக்கு பின்னால் உள்ள சக்தி , பெண்கள் வெற்றிக்கான முயற்சியில் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

13 பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள், தங்களுக்கு ஒரு முக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் மற்றும் சமூகத்தில் வெற்றியை அடைவதற்கான தடைகளை தந்தி முன்னேறியவர்கள் ஆகியோர் பயணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

S.மலர்விழி, இந்திய பெண்கள் நெட் ஒர்கிங் தமிழ்நாடு (IWN ) முன்னாள் தலைவர் மற்றும் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்கள் , அருணா பகுகுணா,ஆந்திராவின் முதல் பெண் IPS, Lt.Cdr ஸ்ரீஸ்தி தாக்கூர், இந்திய கடற்படை, கோபிகா வர்மா, மோகினியாட்டம் எக்ஸ்போனன்ட், அமுதவல்லி, இயக்குனர், இ-காமர்ஸ் & , கேவின் கேர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாடு வழக்கமான விவாதங்கள் மற்றும் கல்வி, வணிகம், அரசியல், ஸ்டார்ட் அப் , கலை, சட்டம், ஊடகம் மற்றும் நிதி போன்ற துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தின் நுணுக்கமான அம்சங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு இருந்தது. புகழ்பெற்ற பேச்சாளர்கள் புதிய இந்தியாவுக்கான தங்கள் பயணங்களையும் தரிசனங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

தொடக்க அமர்வின் போது, சிஐஐ கோயம்புத்தூர் தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். yi கோயம்புத்தூர் தலைவர் விஷ்ணு பிரபாகர் மாநாட்டின் தலைப்பில் உரையாற்றினார்

எஸ்.மலர்விழி தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்கள் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி அவர்கள் தனது தனது சிறப்பு உரையின் போது,

ஐ.டி., உணவு மற்றும் பானங்கள், பம்ப் ஏற்றுமதி போன்ற பல்வேறு துறைகளில் எந்த முன் அனுபவமும் இல்லாத நிலையில், அவர் எப்படி கால்பதித்தார் என்பதை பகிர்ந்து கொண்டார்.

“நாம் அனைவரும் சமமான மற்றும் மனிதநேய உலகத்தை நோக்கிச் செல்கிறோம், மேலும் தலைமைத்துவத்திற்கும் திறமைக்கும் பாலினம் இல்லை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்” என்று IWN – தமிழ்நாடு முன்னாள் தலைவர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி கூறினார்.

“ஐ.டி. பற்றி எனக்கு என்ன தெரியும் என்று நான் உணர்ந்திருந்தால், நான் ஐ.டி. நிறுவனத்தைத் தொடங்கியிருக்க மாட்டேன் … எனக்கு கல்வித் துறை பற்றி மட்டுமே தெரியும் மற்ற அனைத்தையும் எந்த ஆதரவு இல்லாமல் அனுபவத்தின் மூலம் சொந்தமாக கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் அவர் விடுத்துள்ள செய்தியாக, கற்று தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முடியும் என்று நினைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

yi கோயம்புத்தூர் பிரிவு இணைத் தலைவர் நீல் கிகானி நிறைவுரை ஆற்றினார்.

நாடு முழுவதும் உள்ள CII மற்றும் Yi உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர். ரேஸ் கோர்ஸில் உள்ள ஹோட்டல் தாஜ் விவாண்டாவில் மதியம் 3 மணிக்கு இரவு 8 மணி வரை நடைபெற்றது.