பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது போன்ல் அப்படி என்னதான் பாக்குறீங்க என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி , தூங்கி எழுந்ததும் போனை தான் பாக்குறான்,போனை பார்த்துதான் குளிக்கிறான், போனை பார்த்து தான் சாப்பிடுறான், ஆனா இவ்வளவு பார்த்தும் உங்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வரல. அப்படி அந்த போன்ல என்ன தான் பாக்குறீங்க என்று ஆதங்கப்பட்டுள்ளார். புகழ்,பெருமைக்காக கட்சி நடத்தவில்லை,மக்களை நல்வழிப்படுத்தவே கட்சி நடத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.