தொடர்ந்து படங்களில் தோல்விகளை கண்டு வந்த நடிகர் விமல், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார்..
சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விமல் சிவகார்த்திகேயனுடன் தன்னை compare செய்ய வேண்டாமென பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.
கில்லி,, குருவி, கிரீடம், பந்தயம், காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பசங்க வெற்றி பெற்றதை தொடர்ந்து களவாணி, தூங்காநகரம், எத்தன்,வாகை சூடவா, கலகலப்பு என விமல் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தொடர் வெற்றிகளை பெற்று வந்தது.
இந்நிலையில் விமல் நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர்ந்து தோல்விகளை தழுவியது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். விறுவிறுப்பான திரில்லர் கதை களத்தில் சமீபத்தில் ஜீ5ல் வெளியான இந்த வெப் சீரிஸ் தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனின் வெற்றி குறித்து கேட்ட கேள்விக்கு விமல் கூறியுள்ள பதில் இப்போது இணையதளத்தில் வைரலாகிறது.
விமல் மற்றும் சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் இணைந்து நடித்து இருப்பார்கள். அப்போது சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார் விமல் பிஸியாக முன்னணி நடிகராக இருந்தார். ஆனால் இன்று சிவகார்த்திகேயன் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளார் என விமல் மற்றும் சிவகார்த்திகேயனை compare செய்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த விமல் சிவகார்த்திகேயன் கூட என்ன compare பண்ணாதீங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் அந்த மாதிரி சிவகார்த்திகேயன் தன்னுடைய ஸ்டைலில் வளர்ந்து கொண்டுள்ளார் அதேபோல் நானும் எனக்கான ஸ்டைலில் போராடி பயணித்துக் கொண்டுள்ளேன் எனவே யாரையும் யார் கூடயும் compare பண்ணாதீங்க. என சக நடிகரை விட்டுக்கொடுக்காமல் விமல் பேசியுள்ள அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]