79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுதந்திர தின விழா பம்மல் பகுதி சாதிக் பாஷா தலைமையில் , மக்பூல் பாஷா முன்னிலையில், கோரோ, வரவேற்புரையில் கொண்டாடப்பட்டது,

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சௌகத் அலி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்
பின்னர் மாநில மனித உரிமை அணை துணை செயலாளர் முஹம்மது நயினார் இனிப்பு மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்

உடன் நிகழ்ச்சியில் மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட விழி அணி துணை செயலாளர் பரகத்துல்லா மற்றும் செயலாளர் அப்துல் காதர், சித்திக் நிஜாம் சமிவுல்லா, சதாம் மற்றும், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,



