இனிக்கும் இளமை விஜயகாந்தின் முதல் திரைப்படம். 1979 மார்ச் 16-ஆம் தேதி வெளியானது. நேற்றுடன் 43 வருடங்களை நிறைவு செய்து இன்று 44 வது வருடத்தில் இனிக்கும் இளமை காலடி வைக்கிறது.
இந்தப் படத்தில் சுதாகர் நாயகனாகவும், ராதிகா நாயகியாகவும் நடித்திருந்தனர். விஜயகாந்த் வில்லன்.
எம்.ஏ.காஜா எழுதி இயக்கியிருந்த இந்தப் படம் அந்தக்காலத்தில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றது. படத்தில் இடம்பெறும் காட்சி, வசனங்களுக்காக இந்த ‘ஏ’ சான்றிதழ் தரப்பட்டது. சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.சைலஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய, ‘மாலை மயங்கினால் இரவாகும், இளம் மங்கை மயங்கினால் உறவாகும்’ என்ற அற்புதமான பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றதுதான்.
படத்தில் உசிலைமணியை வைத்து காமெடிக் காட்சிகள் வைத்திருந்தார் இயக்குனர் காஜா. ஐயரான உசிலைமணியின் குடுமி ஒரிஜினலா இல்லை போலியா என்ற சவாலில் அவரது குடுமியை பகோடா காதர் பிடித்திழுப்பது போல் காட்சி வைக்கப்பட்டிருந்தது. உசிலைமணியின் மனைவிக்கு அவர் மீது ப்ரியம் உண்டாக பகோடா காதர் ஐடியா தரும் காட்சிகளும் உண்டு.
இவை சில பத்திரிகைகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. ‘இதெல்லாம் ஹாஸ்யங்களா, அந்த ஹாஸ்யத்தின் தலையில் இடிவிழ’ என விமர்சனத்தில் சாபமிட்டது ஒரு பத்திரிகை.
இனிக்கும் இளமை ஓடவில்லை. தயாரிப்பாளருக்கு நஷ்டம். ஆனால், இன்னொரு வகையில் இந்தப் படம் முக்கியமானது. இந்திய சினிமாவில் அனைவரும் அனுபவப்படும் ஒரு விஷயம் பாரபட்சம். நாயகன், நாயகி, இயக்குனர், ஒளிப்பதிவாளர் போன்ற முன்னணி நபர்களுக்கு படப்பிடிப்புத்தளத்தில் கிடைக்கும் மரியாதையும், கவனிப்பும் மற்றவர்களுக்கு கிடைக்காது. அதனை எதிர்பார்ப்பதும் ஒருவகையில் சரியல்ல. ஆனால், சாப்பாட்டில் காட்டப்படும் பாகுபாடு மிகவும் மோசமானது.
நாயகன், நாயகி, இயக்குனர் போன்றவர்களுக்கு ஸ்பெஷலான அசைவ சாப்பாடு தரப்படும். மற்றவர்களுக்கு சைவ சாப்பாடு. இப்போது இந்த வித்தியாசம் இன்னும் பெரிதாகிவிட்டது. நாயகன், நாயகிக்கு அவர்கள் சொல்லும் ஸ்டார் ஹோட்டல்களிலிருந்து உணவு தருவித்து தர வேண்டும். சிக்கன் ஓரிடத்தில், மட்டன் ஓரிடத்தில், சோறு இன்னொரு இடத்தில் என்று புரொடக்ஷன் ஆள்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களுக்கு யூனிட்டில் போடும் சாப்பாடு எதுவோ அதுதான்.
இனிக்கும் இளமை படப்பிடிப்பில் நாயகன் சுதாகருக்கும், நாயகி ராதிகாவுக்கும் ஸ்பெஷல் அசைவ சாப்பாடும், வில்லன் விஜயகாந்துக்கு மற்றவர்களைப்போல சாதாரண சைவ சாப்பாடும் போட்டிருக்கிறார்கள். மதுரையில் சொந்தமாக மில் உள்பட ஏராளமான சொத்துக்கள் விஜயகாந்துக்கு உண்டு. உணவில் காட்டப்பட்ட இந்த பாரபட்சம் அவரை உறுத்தியது. அவர் நாயகனாகி, சொந்தப் படம் எடுக்கையில் ஒரு விதியை கொண்டு வந்தார். நாயகன், நாயகி, இயக்குனர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு அளிக்கப்படும் அதே சாப்பாடு தான் யூனிட்டில் உள்ள மற்றவர்களுக்கும் என்ற நிலைப்பாடை கொண்டு வந்தார்.
விஜயகாந்தின் படம் என்றால், அது வேறொருவர் தயாரிப்பாக இருந்தாலும் உணவு மட்டும் கடைகோடி ஊழியனுக்கும் ஸ்பெஷலாகவே இருக்கும். அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விஜயகாந்துக்குள் விதைத்தது இனிக்கும் இளமை பட அனுபவம் தான். கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்பார்கள். இனிக்கும் இளமையில் விஜயகாந்துக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் பிற்காலத்தில் பலரது இனிப்பான அனுபவத்துக்கு காரணமாக அமைந்தது.
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: