• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் வேல்முருகன் சாமி தரிசனம்..,

ByKalamegam Viswanathan

Jun 9, 2025

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது வைகாசி விசாக பெருவிழா. அதனை முன்னிட்டு இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள், பரவ காவடிகள் அலகு குத்தி பாதயாத்திரையாக வந்து முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் தீவிர முருகபக்தரும் திரைப்பட பின்னணி பாடகரும் கிராமிய இசைக்கலைஞர் பாடகர் வேல்முருகன் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 18 நாட்கள் விரதமிருந்து முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து திருக்கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். பின்னர் கோவில் திருவாச்சி மண்டபத்தில் உள்ள சண்முகர் முருகன் தெய்வானை முன்பு முருகனின் பாடல்களை பாடினார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவரை கண்டதும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். .