• Sat. Apr 20th, 2024

காவல்துறை பணியில் திருநங்கைகள்…அரசு முடிவு

Byகாயத்ரி

Dec 22, 2021

கர்நாடக மாநில காவல்துறையில், சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர் பதவிக்கு 4 திருநங்கைகளும், இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் திருநங்கைகளுக்கு ஒரு துணை காவல் ஆய்வாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக காவல்துறையில் உயர் பதவிகளுக்கு 8 திருநங்கைகளை பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர்கள், குற்றக்காட்சி அதிகாரிகள் பதவிகளில் திருநங்கைகள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.இதுகுறித்து கூடுதல் இயக்குநர் ஜெனரல் கூறியதாவது: “கர்நாடக காவல்துறையில் சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர்களுக்கான 70 பணியிடங்களில் 5 பணியிடங்கள் திருநங்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் கர்நாடக மாநில ரிசர்வ் காவல்துறையில் சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர் பதவிக்கு 4 திருநங்கைகளும், இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் திருநங்கைகளுக்கு ஒரு துணை காவல் ஆய்வாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் ஜனவரி 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதேபோன்று, தடயவியல் ஆய்வகத்தில் உள்ள 206 குற்றக்காட்சி அதிகாரிகள் பணியிடங்களில், 3 பணியிடங்கள் திருநங்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்” என கூடுதல் இயக்குநர் ஜெனரல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *